மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் உ என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் தினசரி செலவுகளுக்காக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 சதவீதம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை (DA) 4% அதிகரித்து தற்போதுள்ள 38%லிருந்து 42% வரை மத்திய அரசு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்களுக்கான DA வழங்கப்படுகிறது.