மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது இன்று  காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ள நிலையில் மதுரை மாவட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக நேரடியாக ஆட்சியரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.