கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெறும்  தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு, மனிதநேயத்தின் சிகரமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

‘தனிப்பெருங்கருணை’ என்ற வள்ளலாரின் வாக்குக்கு இலக்கணமாக, கடலூரைச் சேர்ந்த மொத்த காய்கறி வியாபாரி பக்கீரம் (Bakki Ram) என்பவர், அங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சுமார் 18 டன் காய்கறிகள், 100 மூட்டை அரிசி மற்றும் 7,500 குடிநீர் பாட்டில்களை முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளார்.

“>

 

கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக மதம் கடந்து இந்தப் பெரும் சேவையைச் செய்து வரும் அவர், இந்த ஆண்டு சாதனை அளவாக இவ்வளவு பெரிய தொகையை வழங்கியிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. “மதம் என்பது வேறாக இருந்தாலும், பசி என்று வருபவர்களுக்கு உணவளிப்பதே உண்மையான அறம்” என அவர் வெளிப்படுத்திய இந்தச் செயல், ‘இதுதான் தமிழ்நாடு’ என சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வைரலாகி வருகிறது!