இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் இலக்கணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்கு நடைபெற்ற ராம நவமி விழாவின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by The Logical Indian (@thelogicalindian)

அப்போது, அந்த வழியாக ஒரு முஸ்லிம் பெரியவரின் இறுதி ஊர்வலம் வந்துள்ளது. இதைப் பார்த்த இந்து பக்தர்கள், உடனடியாக முழங்கிக்கொண்டிருந்த டிஜே இசையை நிறுத்துமாறு சைகை காட்டி ஊர்வலத்தை அமைதியாக நிறுத்தினர்.

அந்த இறுதி ஊர்வலம் கண்ணியமான முறையில் கடந்து செல்லும் வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமைதி காத்து வழிவிட்டது காண்போரை நெகிழச் செய்தது.

மத ரீதியான விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அடிமட்டத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் காட்டும் இந்த மரியாதைதான் “உண்மையான இந்தியா” என சமூக வலைதளங்களில் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

“பண்டிகைகள் கொண்டாடப்படலாம், ஆனால் பிறரின் துக்கத்தில் பங்கு பெறுவதே மிகச்சிறந்த வழிபாடு” என்பதை ஹசாரிபாக் மக்கள் நிரூபித்துள்ளனர். #HazaribaghModel என்ற ஹேஷ்டேக் கீழ் இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

மதங்களைக் கடந்து மனிதாபிமானம் போற்றப்பட்ட இந்தச் செயல், அமைதியை விரும்புவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.