தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் தேர்தல் சமயத்தில் மணிப்பூரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டால் வாக்காளர்கள் ஓட்டு போடாமல் அங்கிருந்து அலறியடித்துவிட்டு ஓடிவிட்டனர். இதன் காரணமாக மணிப்பூரில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.