தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சக்திவாய்ந்தவர்கள் கைகோர்த்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் சிக்கபல்லாபுரா பகுதியில் பிரசாரம் செய்த அவர், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருவதாகக் கூறினார். தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறேன். மகளிரின் ஆசீர்வாதத்தால் சவால்களை எதிர்த்து வெற்றி பெறுவேன் என்றார்.