தன்னுடைய முகத்தின் அழகை பாதுகாப்பதற்கு பள்ளியில் வைத்து பேஷியல் செய்த தலைமை ஆசிரியரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கிராமம் ஒன்றில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் சங்கீதா சிங் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மேக்கப், ஹேர் ஸ்டைல் போன்றவற்றை அதிக கவனம் செலுத்துவது உண்டு. சமீபத்தில் சங்கீதா வகுப்பிற்கு சென்று மாணவர்களுக்கு பாடம் கூட நடத்தாமல் மேக்கப்பில் கவனம் செலுத்துவதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு அதே பள்ளியில் பணி புரியும் அனம் கான் என்ற ஆசிரியை முடிவு கட்ட நினைத்துள்ளார்.

இந்நிலையி சம்பவத்தன்று சங்கீதா ஒரு பியூட்டிஷனை தன்னுடனை அழைத்து வந்து பள்ளி சமையலறைக்குள் பேசியல் செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தபடியே அனம் கான் சமையல் அறைக்குள் நுழைந்துள்ளார். அதில் சங்கீதாவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது . இதனால் ஆத்திரமடைந்த அவர் வீடியோ எடுத்த ஆசிரியர்  மீது பாய்ந்து கடித்துள்ளார் . இதனை அடுத்து சக ஆசிரியரான அனம் கான் காவல் நிலையத்தில் சென்று வீடியோவை சமர்ப்பித்து அவர் மீது புகார் அளித்துள்ளார் . இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியை சங்கீதாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.