கேரளாவின் மலப்புரம் அருகே 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் சகோதரிகளுக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நெடும்பசேரியைச் சேர்ந்த பேசில் பேபி (23), திருச்சூரைச் சேர்ந்த முகமது ரமீஸ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். உறவினர் வீட்டில் வசித்து வந்த சிறுமிகள் காணாமல் போனதாக வண்டூர் போலீசில் புகாரளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமிகளை கடத்தி பெங்களூருக்கு அழைத்து வந்து மதுபானம் கொடுத்து இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

அங்கிருந்து 4 பேரும் திரும்பி வரும்போது, ஆனமரி சோதனைச் சாவடியில் போலீசார் இவர்களை மடக்கிப் பிடித்தனர். குற்றவாளிகள் இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.