மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன என மணிப்பூர் போலீஸ்தெரிவித்துள்ளது.