குஜராத் மாநிலம் சபர் காந்தா என்ற மாவட்டத்தில் இரண்டு மூக்கு கொண்ட அதிசய குழந்தையை பெண் ஒருவர் சமீபத்தில் பெற்றெடுத்துள்ளார். அதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹிம்மத்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை சிறந்த சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது அந்த குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருந்தாலும் ஒவ்வொரு 8000 முதல் 15 ஆயிரம் குழந்தைகளின் ஒருவர் இவ்வாறு பிறப்பதாக கூறப்படுகிறது. அரிதாக பிறந்துள்ள இந்த குழந்தையை உறவினர்கள் மட்டுமல்லாமல் ஊர் மக்கள் பலரும் வியப்புடன் பார்த்து வருகிறார்கள்.