நெட் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 மற்றும் 27 இல் வெளியாகும் என பல்கலைக்கழகம் மாநில குழு தற்போது அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவி தொகை பெறுவதற்கும் நெட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேற்கண்ட பணிகளில் சேர முடியும்.

கடந்த பிப்ரவரி 21 முதல் மார்ச் 10ஆம் தேதி வரை கணினி வழியில் இரண்டு கட்டங்களாக நடந்த நெட் தேர்வுகளை சுமார் 6.39 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் நெட் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 அல்லது ஜூலை 27 இல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது