மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று முதல்வர் பிரேன் சிங்கின் வார்த்தைகள் இன்னும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இதற்கு முன்னதாக மணிப்பூரில் மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 31ம் தேதி வரை இந்த தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் கலவரத்தில் வன்முறை பேச்சுகள் மற்றும் கோர விபத்து புகைப்படங்கள் வீடியோக்களால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் இணையதள சேவைகளுக்கான தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.