தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்தத் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. ஆட்சியர்கள் அதனை தடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான சில பணிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது நல்ல நிர்வாகத்திற்கு அழகு அல்ல. அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அரசு திட்டங்கள் மக்களிடம் விரைவாக சென்றடையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.