Whatsapp டிபி வழியாக இளம் பெண்களின் போட்டோவை திருடி ஆபாசமாக சித்தரித்து 900 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞருக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போனில் யுபிஐ மூலமாக பணம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது ஆனால் அந்த இளைஞர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவரின் whatsapp டிபியில் இருந்த அவரது மனைவி மற்றும் தங்கையின் படங்களை ஆபாசமாக சித்தரித்து அதனை அனுப்பி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது குறித்து சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தூத்துக்குடி சேர்ந்த சரத்குமார் என்பவர் தான் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த சரத்குமார் தூத்துக்குடியில் இருந்து சேலம் வந்துள்ளார். அங்கு வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 900 க்கும் அதிகமான பெண்களின் புகைப்படங்களை whatsapp டிபிகளிலிருந்து திருடி அவர் ஏமாற்றியது தெரியவந்தது.