சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையோர காய்கறி கடைகளில் கள்ள நோட்டுக்களை மாற்றிய முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான நேற்று செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் சேகர் தேஷ்முக், பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கள்ள நோட்டு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக காவல்நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், கள்ள நோட்டை எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்பதை கூறியுள்ளார்.

ழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோடு ரூபாய் நோட்டின் நடுவில் இருக்கும். ரூபாய் நோட்டை  நம்மை நோக்கி படுக்க வைத்து பார்த்தால் அந்த கொடு ஊதா கலரில் தெரியும். அதை அப்படியே லைட்டாக கொஞ்சம் கொஞ்சமாக மேலாக கொண்டுவந்தால் பச்சைக்கலராக அது மாறினால் நல்ல நோட்டு என்று தெரிந்துவிடும்.

பிரிண்ட் அல்லது கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு தயாரிக்கும் ரூபாய் தாளில் இந்த மாதிரியான நிறம் மாறாது. அதேபோல ரூபாய் நோட்டில் காலியாக இருக்கும் வெள்ளை கலர் இடத்தில் கொஞ்சம் தூக்கி வைத்து பார்த்தால் காந்தி தாத்தா படமும், 500 என்றும் எழுதியிருக்கும். இதைப் பார்த்த உடனே நல்ல நோட்டு என்பதை கண்டுபிடித்து விடலாம். கண் தெரியாதவர்கள் ரூபாய் நோட்டுகளை எப்படி அடையாளம்  காண்பதற்கு பிரைலி சிஸ்டம் என்பதை RBI அறிமுகப்படுத்தியுள்ளது.