சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் காமராஜர் சாலையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. இதனையடுத்து தனியார் செயலி மூலம் அறிமுகமான ஒருவர் அருண்குமாரை பகுதி நேர வேலைக்கு சேர்த்து விட்டார்.

அந்த நபர் கூறியதை நம்பி அருண்குமார் சில வங்கி கணக்குகளுக்கு 55 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தார். அந்த பணம் வட்டியுடன் திரும்ப கிடைக்கும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணமும் திரும்ப வரவில்லை. வட்டியும் கொடுக்கவில்லை. இதுகுறித்து அருண்குமார் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.