தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் 50000 வரை தான் ரொக்கமாக பணம் கொண்டு செல்ல முடியும். 50000 ரூபாய்க்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா மூன்று பறக்கும் படை, மூன்று நிலையான கண்காணிப்பு படை (மொத்தம் 1,404 படைகள்) அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபடுவர்.