ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எண்ணைப் பெற்றவர்கள் மற்றும் சமீபத்தில் தங்கள் பதிவுகளை புதுப்பிக்காதவர்கள் தங்கள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆதார் வைத்திருப்பவர்கள் தங்களது முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் https://myaadhaar.uidai.gov.in-இல் ஜூன் 14, 2023 வரை இலவசமாகப் பதிவேற்றலாம். இதில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவை அடங்கும்.