தமிழகத்தில் இன்று  (ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை, வங்கிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்காது. அதே சமயம், குடிநீர், பால், மளிகை, காய்கறி, மருந்துப் பொருட்கள், பேருந்து போக்குவரத்து தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.