தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த 20ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 27ஆம் தேதி உடன் முடிந்தது. 28ஆம் தேதி முதல் வேட்பு மனு பரிசீலனை நடந்த நிலையில் 1085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும். அத்துடன் சின்னம் ஒதுக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.