நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் தொகுதி வேட்பாளர் கௌசிக்கை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, எனது சின்னமான மைக் இல்லாமல் எந்த தலைவரும் எந்த சின்னத்திற்கும் வாக்கு கேட்க முடியாது. மைக் முன்பு நின்று வாக்கு கேட்பதால் அனைவரும் எனக்கு தான் வாக்கு சேகரிக்கின்றனர். மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் என படித்தவர்களை தேடி பிடித்து வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளேன். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.