தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று ஆழ்வார்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால் தான் ஐந்து முறை தேர்தலில் நின்றும் தோற்றுப் போனேன்.

பணம் கொடுத்துதான் தமிழகத்தில் பல இடங்களில் ஓட்டுகளை வாங்குகிறார்கள். இதனால் பணம் இல்லாததால் தான் நான் ஐந்து முறை தேர்தலில் நின்று தோற்றுப் போனேன். தேசத்திற்கு பிரதமர் மோடி கேரண்டி, தென் சென்னைக்கு தமிழிசை அக்கா கேரண்டி, எப்படி ராமருக்கு அனுமாரோ அது போல பிரதமர் மோடிக்கு நாங்க எல்லாம் என்று தெரிவித்தார்