மகாராஷ்டிரா மாநிலம்  பிம்ப்ரி சின்ச்வாட் நகரின் தலவாடே பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி ஆணையர் சேகர் சிங் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தீ விபத்தால் வானத்தில் புகை மண்டலமாக காட்சியளித்தது.