தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையால் 70% பெண்களுக்கு மேல் அரசுக்கு ஆதரவு கிடைத்துள்ளதால் இந்த திட்டம் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார். ஆயிரம் ரூபாய் திட்டத்தால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.