தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் விண்ணப்பித்தவர்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும் தகுதியான நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தகுதியானவர்களுக்கு நவம்பர் 10ஆம் தேதி முதல் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.