தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் , குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் விடைத்தாளை திருத்தும் பணி தேர்வாணையத்தில் உள்ள கணினி ஆய்வகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மதிப்பீட்டுப் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.