தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் , குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் விடைத்தாளை திருத்தும் பணி தேர்வாணையத்தில் உள்ள கணினி ஆய்வகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மதிப்பீட்டுப் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?…. தேர்வர்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!
Related Posts
விஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read moreமாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…
Read more