தமிழகத்தில்  மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இல்லத்தரசிக்குகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திட்ட செயலாக்கம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ரூ.7000 கோடிக்கு நிர்வாக அனுமதியும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாதாக, எதன் அடிப்படையில் யாருக்கு எல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்ற விரிவான அறிவிப்பையும் அரசு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.