தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று சோனியா காந்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தெலுங்கானா மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்கலாம், 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் எனவும் மாதந்தோறும் மகளிருக்க 2500 வழங்கப்படும் எனவும் பல்வேறு அறிவிப்புகளை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார்.