தனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிடல் கையெழுத்திட்டவர் ஜெயலலிதா தான். அதனால் இது வாரிசு அரசியலில் வராது என தெரிவித்தார். மேலும் அதிமுகவில் உள்ளவர்களை வலை வீசி பிடிக்கும் வேலையை பாஜக செய்து வருவதாக சாடிய அவர், அதிமுகவில் பற்று உள்ளவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.