தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதே கட்சியின் முன்னாள் நிர்வாகி எஸ்.வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். அண்ணாமலையின் செயல்பாடுகள் பிடிக்காமல் கட்சியிலிருந்து விலகியவர் எஸ்வி சேகர்.

இந்த நிலையில் அடுத்தவரின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து அரசியல் செய்வது தவறு என்றும் அண்ணாமலையை சாடி இருக்கும் அவர், அண்ணாமலை போலீஸ் வேலைக்கு லாய்க்கு இல்லாதவர் என்று விமர்சித்துள்ளார்.