சிங்கப்பூரில் வசித்து வந்த ஹரிதாஸ் என்ற இந்திய வம்ச வழியைச் சேர்ந்தவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தனது 52 வயது காதலியுடன் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மற்றொரு நபருடன் ஹரிதாஸுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சிங்கப்பூர் போலீசார் அவரிடம் விசாரிக்க சென்றபோது காவல்துறையினரிடமும் ஹரிதாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு கட்டத்தில் விசாரிக்க வந்த 22 வயது கான்ஸ்டபிளை காலால் மிதித்த தாக்கியுள்ளார். இது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.