இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படத்தின் நான்காவது பாகம் கடந்த மே மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராக்ஷி கண்ணா, யோகி பாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இலக்காக கொண்டு உருவாக்கிய இந்த திரைப்படம் கோடைகால விடுமுறையால் பலன் கிடைத்துள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் உலகம் முழுவதும் 19 நாட்களில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்போது 100 கோடி வசூலித்து பெருமை பெற்றுள்ளது.