தமிழகத்தில் போகி பண்டிகை என்று பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் டயர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலைய ஆணையை இயக்குனர் தீபக் கேட்டுக் கொண்டுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதுடன் விமான போக்குவரத்தும் தடைப்படும். எனவே பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் புகையில்லா போகியை கொண்டாடுவோம் என கூறியுள்ளார்.