தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் பழகுணர் வாரியம் மூலமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டம் மற்றும் பட்டய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருட காலம் அரசால் தொழில் பயிற்றுநர் பயிற்சி வழங்கப்படும்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தொழில் பழகுணர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் www.boat-srp.com என்ற இணையதளம் மூலமாக மார்ச் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.