மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில்  பொன்னியின் செல்வன் 2 இன்று காலை வெளியாகியது. தற்போது படத்தின் முதல் விமர்சனம் டுவிடரில் வந்துள்ளது.

முதல் பாகம் வெறும் முன்னுரை தான் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது PS-2. இவர்தான் என்று சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு அனைவரும் சிறப்பாக கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளனர். அனைவரின் கதாபாத்திரமும் முழுமை பெற்று ரசிகர்களை திருப்தி அடைய வைக்கிறது. மெய் சிலிர்க்க வைக்கும் இறுதி நிமிட காட்சிகள் உடன் விறுவிறுப்புக்கும், சுவாரஸ்யத்துக்கும் பஞ்சம் இல்லாமல் கதையை நகர்த்தி உள்ளார் மணிரத்தினம்