உக்ரைனின் காா்கிவ் நகரில் இருந்த தனியார் அஞ்சல் மற்றும் கொரியர் அலுவலகத்தின் மீது கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் என காா்கிவ் ஆளுநர் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் ரஷ்யா பொதுமக்களை குறி வைப்பதற்கு உதாரணம் என்று கூறியதோடு இந்த சம்பவத்திற்கு அதிபர் ஸெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.