தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முழுமையான பாடத்திட்டத்தின் படி நடைபெற உள்ளது. அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் மாணவர்கள் பொது தேர்வுக்காக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இதற்காக மாணவர்களுடைய விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முறைப்படி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.