தமிழ்நாடு அரசு கடந்த மாத இறுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறபட்டுள்ளதாவது, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி கோவை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜி.எஸ் சமீரன் கொரோனா காலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டவர். பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயர் பெற்றிருந்தார். இதனால் இவரது இடமாற்றம் சற்று வருத்தத்திற்கு உரியதாக கோவை மக்கள் பார்க்கின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக கிராந்தி குமார் பாடி பொறுப்பேற்று கொண்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளில் அவர் கையெழுத்துள்ளார். இதனையடுத்து புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியரிடம் ஜி.எஸ்.சமீரன் கோப்புகளை ஒப்படைத்துள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி  கூறியதாவது, நான் கடந்த 2015 ஆம் ஆண்டு சேர்ந்த ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி. திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தேன். இன்று கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொள்கின்றேன். அரசின் அனைத்து திட்டங்களையும் சரியான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அனைத்து துறைகளில் உள்ள திட்டங்களையும் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி பொதுமக்களிடம் அந்த திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். பணியில் அமர்ந்த முதல் நாளே அரசு நிர்வாகம், நலத்திட்ட பணிகள், முதல்வர் ஸ்டாலின் என்றெல்லாம் பேசியது அதிகாரிகளை சற்று சிந்திக்க வைத்துள்ளது. இவரும் கராறான அதிகாரியா? இல்லையா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.