தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் கூடுதல் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு மாலை நேரம் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம பொதுமக்கள் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு மினி சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தினமும் மாலை நேரத்தில் வெஜிடபிள் பிரியாணி, சுண்டல் மற்றும் பச்சைப்பயிறு உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன