தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும்  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பொங்கல் பரிசு தொகையை நியாய விலை கடைகளை பெற்றுக் கொள்ளலாம். நியாய விலை கடைகள் நவீனப்படுத்தப்பட்டு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பரிசுத்தொகையானது வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பு இல்லை. கரும்புகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்று உறுதி கூறினார்.