தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று ஜனவரி 12 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 12 முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 6300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் சென்னையிலிருந்து 4706 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 11006 பேருந்துகளும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்காக 8,478 பேருந்துகள் என மொத்தம் 19 ஆயிரத்து 484 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை மக்கள்  94450 14450, 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.