தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் மக்கள் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த வேலை நாளை ஈடு செய்ய ஜனவரி 16ஆம் தேதி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.