சென்னை துறை பாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 13 ஊழியர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பத்தாவது மாடியில் உள்ள அலுவலகத்தில் 240 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மயக்கம் அடைந்த 13 பேரும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஏசியில் இருந்து வாயு கசிந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.