தைப்பொங்கல் திருநாள் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சர்க்கரை பொங்கல் தான். அனைவரது வீட்டிலும் பொங்கல் செய்தாலும் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக கோவில் பிரசாதம் சுவையில் பொங்கல் செய்து பாருங்கள். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி- 1 கப்

வெல்லம்- கால் கிலோ

முந்திரி, உலர் திராட்சை- தேவையான அளவு

பசு நெய்- 10 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி- 1 டீஸ்பூன்

பச்சை கற்பூரம்- சிறிதளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி நிலைக்கு வந்ததும் அரிசியை அலசி போட்டு வேக விட வேண்டும். அரிசி நன்றாக குலைந்து வெந்த பிறகு தண்ணீரை மட்டும் வடித்து விட்டு வந்த அரிசியை மசித்து விடவும். பிறகு வெள்ளத்தை பாகு காய்ச்சி சாதத்தில் ஊற்ற வேண்டும். சாதமும் வெல்லமும் கலந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் உலர் திராட்சை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்தால் கோவில் பிரசாதம் சுவையில் சர்க்கரை பொங்கல் தயாராகிவிடும்.