தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் சென்னை, பெங்களூர், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது. மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.