தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பாக பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரயில்வே துறை சார்பாக பல்வேறு இடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பாக புதிய ஏழு வழித்தடங்கள் அமைக்க சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் பாதையை இணைக்கும் விதமாக கூடுதல் ரயில் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக ஏழு வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு சர்வே பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.