இந்த வருடம் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வேலை செய்வோர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லுவது உண்டு. இதற்காக சிறப்பு போக்குவரத்து வசதிகளும் செய்யப்படும். ரயில் பயணத்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கப்பட இருக்கிறது.

ரயிலில் பயணம் செய்ய செப்டம்பர் 13ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது. ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதியும், பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 14ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 16ஆம் தேதியும், பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 17ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.