தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் வருகின்ற புதன்கிழமை ஜனவரி 17 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பும் பணி நடைபெறாது என்பதால் பணம் தட்டுப்பாடு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் மீண்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் சனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். எனவே வங்கி செல்பவர்கள் முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.