சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் செயலி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மக்கள் தங்களுடைய கருத்துக்களையும் நண்பர்களுடனான தகவல்களை பகிர்வதற்கும் தங்களது அன்றாட வாழ்வில் நிகழ்வுகளை பதிவு செய்யவும் பேஸ்புக் செயலி உதவிகரமாக உள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் youtube போன்ற மற்ற செய்திகளின் பயன்பாடு அதிகரித்து வரும் போதிலும் facebook செயலுக்கான பயனர்கள் அதிக அளவில் தான் தற்போதும் உள்ளனர்.

இந்த நிலையில் மெட்டாவுக்கு சொந்தமான facebook செயலியின் லோகோ தற்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதிய லோகோவுக்கும் பழைய லோகோவுக்கும் எந்த ஒரு வேறுபாடுகளும் இல்லாத நிலையில் நெட்டிசன்கள் புதிய லோகோ அப்டேட் தொடர்பாக மெட்டா நிறுவனத்தை கலாய்த்து வருகின்றனர்.