கேரளாவின் திருச்சூரில் திங்கட்கிழமை ஓடும் பேருந்தில் இருந்து 74 வயது பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காலியாக இருந்த இருக்கையை நோக்கிச் செல்லும்போது அந்தப் பெண் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார்.

வீடியோவில் அந்தப் பெண் பேருந்தில் ஏறுவதை காணலாம். காலியாக இருந்த இருக்கையைக் கண்டதும், அந்தப் பெண் அங்கு உட்கார முன் சென்றார். இருப்பினும், அவர் முன்னேறிச் செல்லும்போது, வாகனத்தின் வேகத்தைக் குறைக்க ஓட்டுநர் சடன் பிரேக் பிடித்தார்.

அப்போது பேருந்தின் கதவு திறந்திருந்ததால், எதிர்பாராதவிதமாக மூதாட்டி கீழே விழுந்தார். நடத்துநரும் முன் வரிசையில் அமர்ந்திருந்த மற்ற பயணிகளும் மூதாட்டியை பிடிக்க முயன்றனர், ஆனால் அவர்களால் முடியவில்லை.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். நடத்துனர் உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கினார். பின்னர் படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.